சனி, 9 ஜனவரி, 2010

கமல் ரஜினி தான் மனிசங்களா ?

காலையில் படித்த /பார்த்த இரு செய்திகள் தான் இதை எழுத தூண்டியது .
அய்யா முதல்வரே
உங்கள்ளுக்கு இந்த ***** சினிமாகாரங்க கஷ்டபட்டா மட்டும் தான் கண்ணு தெரியுமா .மத்தவங்க எல்லோரும் எப்படி நாசமா போன உங்களுக்கு என்ன .தமிழ் நாட்டில் சினிமாகரர்களை தவிர அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்கின்றனர் என நீங்கள் நினைகின்றீர்கள் போலும் .
தமிழ் வழியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு ஆனால் தமிழில் படத்திற்கு பெயர் வைத்தால் லட்சகணக்கில் வரிவிலக்கு .
ஒரு படத்தின் கதையை [ நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது,ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை] திருடி படம் எடுத்த அந்த ***** படத்த திருட்டு vcd யில் விற்பனை செய்த காரணதிற்க ஒரு உயிர் தேவை இல்லாமல் போய்விட்டது .அதுக்கு காரணமான போலீசார் மீது என்ன நடவடிக்கையும் கிடையாது .ஆனா திருட்டு vcd விற்பனைசெய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் . தப்பு செய்றவங்க மீது உடனடி நடவடிக்கை என்பது சந்தோஷமான செய்திதான் ஆனா அது ஒருதலை பட்சமாக இருக்கு . கதைய திருடி படம் எடுத்த அந்த மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கமுடியுமா.

செய்தி 2
ஒரு SI உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார் அதை இரு அமைசர்களும் பல அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கின்றனர் .மக்களே இதைப்பாருங்கள் .கண்முன் இறக்கும் ஒரு உயிரை காப்பாத்த இவர்களா நம்மை காப்பாத்த போகின்றார்கள் .என்ன கொடுமை தமிழா இது .

இன்னும் எத்தனைகாலம் தான்
ஏமாறுவோம் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே


.

கருத்துகள் இல்லை:

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore